Categories: கவிதை

ஒரு கனவு

< 1 நிமிட வாசிப்பு

நிறைந்து விட்ட
மூத்திரப் பையுடன்
அலைகிறேன் ஒதுங்க இடம்தேடி
வந்தடைகிறேன் நிலம் கீறி
அடர்ந்து நிற்கும்
விதையிலைகள் நிறைந்த வயல்வெளி
என்றைக்கு நினைவு மனதில்
விழுந்து புதைந்த விதைகளோ
இவையெல்லம் என்றெண்ணியபடி
ஒன்றுக்கிருக்க முயற்சிக்கிறேன்
யாரோ வேகமாய் வந்து
கனவுக்கே தர்க்கம் போலும்
சத்தமிட்டுக் கல்லெறிந்து விரட்டுகிறான்
ஒன்றுக்கிருப்பதை நிறுத்தவும் முடியாமல்
ஓடவும் முடியாமல் தவிக்கையில்
அருகேயே நெருங்கி விட்டான்
தப்பி ஓடுகிறேன்
அத்தனை வன்மத்தோடு கனவுக்குள்
விரட்டுமவன் தொடும் முன்
முழிப்பு வந்தது

விரட்டியவன் மூளைக்குள்ளிருக்கிறானா
விழித்து நிஜத்தில் காலியாகும்
மூத்திரப் பைக்குள்ளிருந்து
நீராகி வெளியேறுகிறானா

கலாப்ரியா

திருநெல்வேலியில் பிறந்த இவர் 1969லிருந்து 50 வருடங்களாகக் கவிதைகள் எழுதி வருகிறார். கசடதபற, கணையாழி, தீபம், வானம்பாடி என 1970 களில் வெளிவந்த இலக்கியப் பத்திரிகைகள் உள்ளிட்டு அனைத்து இலக்கியப் பத்திரிகைகளிலும் பெரும்பாலான வெகுசன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. வெள்ளம், தீர்த்த யாத்திரை, மற்றாங்கே, எட்டயபுரம், சுயம்வரம் மற்றும் கவிதைகள், உலகெல்லாம் சூரியன், அனிச்சம், வனம் புகுதல், எல்லாம் கலந்த காற்று, நான் நீ மீன், உளமுற்ற தீ, தண்ணீர்ச் சிறகுகள், தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி, ஆகிய தனித் தொகுப்புகளும் அவ்வப்போது அனைத்துக் கவிதைகளின் தொகுப்பாக ‘கலாப்ரியா கவிதைகள்’ என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளும் வந்துள்ளன. ”சொல் உளி’ இவரது பதினாறாவது கவிதைத் தொகுப்பு. தன் வரலாற்றுப் புனைவுக் கட்டுரைகள், தமிழ்த் திரைப்படங்கள், இலக்கியப் படைப்புகள் பற்றிய கட்டுரைகள் என ஏழு நூல்கள் வெளிவந்துள்ளன. மொத்தம் 36 நூல்கள் வெளிவந்துள்ளன. பல கவிதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது, கவிஞர் கண்ணதாசன் விருது, கவிஞர் சிற்பி விருது, கவிஞர் தேவமகள் விருது, நூலாசிரியர் பதிப்பாலர் சங்கமான ‘பப்பாசி’ வழங்கும் கலைஞர் பொற்கிழி விருது, ஜெயகாந்தன் விருது, மனோன்மணியம் சுந்தரனார் விருது( மூன்றும் தலா ஒரு லட்சம் பணமுடிப்பு மற்றும் பாராட்டுக் கேடயங்கள்.) எனப் பல விருதுகள் பெற்றவர். பலர் இவரது கவிதைகளில் ஆய்வு மேற்கொண்டு இளம் முனைவர், முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர். தற்போது தென்காசி அருகே இடைகால் என்ற ஊரில் வைத்து வருகிறார். மனைவி சரஸ்வதி, பணி நிறைவு பெற்ற முதுநிலை ஆசிரியை. மருத்துவர் அகிலாண்ட பாரதி, பொறியாளர் தெய்வநாயகி என இரண்டு புதல்வியர்.

Share
Published by
கலாப்ரியா

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago