Categories: கவிதை

கவிதை – சுபா செந்தில்குமார்

< 1 நிமிட வாசிப்பு

சேறு குழைக்கப்பட்ட
நீரில் மிதக்கிறது
தட்டையான வானம்.
அறுத்து வைக்கப்பட்ட
சூளையின் வடிவங்களை
அவ்வப்போது கரைத்துவிடுகிறது
கவிழ்த்து வைக்கப்பட்ட
அரைவட்ட பூமி.
கோளம் எனப் புரிந்துகொள்ளப்படும்
அண்டத்தின் ஒரு புள்ளியில்
எவ்விதக் குழப்பமுமின்றி
சேற்றுடன் விளையாடும் சிறுமி
அப்பாவையும்
அம்மாவையும்
தம்பியையும்
குழைத்து குழைத்து வடிக்கிறாள்
சிறிதும் பெரிதுமான
பழகிப்போனச் செவ்வகங்களாய்.

சுபா செந்தில்குமார்

ஐந்து ஆண்டுகளாகக் கவிதைகள் எழுதி வரும் இவர் சிங்கையில் இலக்கியம் சார்ந்த தமிழ் அமைப்புகளில் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு தேசிய கலை மன்றம் நடத்திய தங்க முனை போட்டியில் கலந்து கொண்டு கவிதைக்கான பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார். சிங்கையில் தி சிராங்கூன் டைம்ஸ் மற்றும் புதிய நிலா இதழிலும், தமிழகத்தில் வெளிவரும் ஆனந்த விகடன், குங்குமம், இனிய நந்தவனம், உயிர் எழுத்து இதழ்கள், குறிஞ்சி மின்னிதழ் மற்றும் காற்றுவெளி கலை இலக்கிய இதழிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. தான் சந்தித்த சமகால மனிதர்கள், அவர்களின் வாழ்வியல் குறித்த புரிதல்கள், அவைசார்ந்த நுண்ணுணர்வுகள் போன்றவற்றைக் கவிதைகளில் தொடர்ந்து பதிவுசெய்வதை இவர் விரும்புகிறார்.

View Comments

Share
Published by
சுபா செந்தில்குமார்

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago