கவிதை

விதியினும் பெரிதோர் பொருள்

< 1 நிமிட வாசிப்பு

ஒரு நதியிடமிருந்து தப்பிவந்த எறும்பு
எதன்மீதோ
ஊரத் துவங்கியிருந்தது…

வளைந்து நெளிந்து ஒரு வட்டத்திலிருந்து
பெரு வட்டமாய்
முன்னேறிக் களித்தாடியது…

நொடிகள் பூராவும் தடித்துக் கொண்டன
அது மீண்ட வேளையில்…

தப்பியோடிச் சிலாகிக்க முயன்று
தோற்றுவிட்டதை எண்ணி
மீண்டுமோர் வட்டமிட்டது…

எப்படியும் ஏறிவிடலாமென
திடமாய் நம்பி தடமேறிப் போனது…

இன்றுமட்டும் இதைத் தாண்டிவிட்டால்
வாழ்வின் கோடிட்ட இடங்களை
அது நிரப்பி விடலாம்…

எதனைப் பற்றிக்கொண்டு
நீந்திச் செல்வது
நதிகளற்ற பெருவெளியில்…

கொடுந்தீ பற்றியெரியும் ஒரு கட்டிடத்தின்
உள்ளிருந்து வந்த ஒரு காகிதம்
அதன் கால்களில் உரசியவாறு சென்றது…

எறும்பு ஊரத் தொடங்கி நெடுநேரம் ஆகிவிட்டிருந்தது..

இப்போது சாரை சாரையாய்ப் பெயர்ந்து
நகரத் துவங்கி இருந்த
கரையான்களைக் காண நேர்ந்தது…

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு முன்னைக் காட்டிலும்
வேகமாய் நகர்ந்து முன்னே சென்றது…

கரையான்களின் கண்களுக்குள் நெருப்பின் வாடை…
அதுவே இப்பொழுது அவற்றின் ஆடையாய்…
கரையான்கள் நெருங்க நெருங்க
எறும்பு
பெரிதினும் பெரிதானது
நீண்ட கால்களுடன்
உருண்ட கண்களுடன்
கூரிய கொடுக்குகளுடன்…
திமிறியது…
இனி கோலமாவைத் தின்பதில்லை
எனும் கொதிப்புடன்…

செம்மல்

முழுப் பெயர்: செ.செம்மல் இளங்கோவலன் (எம்.ஏ. ஆங்கில இலக்கியம்) கவிதை, பேச்சு போன்ற தளங்களில் இயங்கி வருபவர். கோவை அருகில் உள்ள சிங்காநல்லூரைச் சொந்த ஊராகக்கொண்டவர். தொழில்: அச்சுத் தொழில்.

View Comments

Share
Published by
செம்மல்

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago