கவிதை

வே.நி.சூர்யா கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

04.15 AM

இத்தனைக்கும் நான் வெறுமனே நடந்துதான் செல்கிறேன்
எனக்கு என்னவோ ஒரு சீசாவில் இருப்பது போலவே இருக்கிறது
அதுவும் ரொம்ப நேரமாக..
அடடே.. உண்மைதான் போல
இரண்டு பக்கமும் சாட்சாத் நானே அமர்ந்திருக்கிறேன்
இங்கே என் கால்களால் மண்ணை எம்பி அழுத்தி மேல்நோக்கிப் போகிறேன்
அந்தப் பக்கம் நான் கீழே வருகிறேன்
பரவாயில்லையே
இப்படியே நாம் விளையாடிக் கொண்டிருப்போம்
இன்னும் எவ்வளவோ நேரம் இருக்கிறது
சூரியன் தன் கதிர்களை அனுப்பி வைக்க..


கண்ணாடிக் குவளை

மீண்டும் மீண்டும், தவறி விழுமெனத் திரும்பத்திரும்ப
நினைக்கிறேன். சில்லுச்சில்லாக நொறுங்குகிறது. ரகசியமாய்த் தவறி
விழாது என எண்ணுகின்றேன். சில்லுகள் தங்களைக் கணத்தில்
கோர்த்துக்கொள்கின்றன. விழுந்த சப்தம் உடைந்த காட்சியைப்
பொறுக்கிக்கொண்டு மறைகிறது. மேசையில் என் அடுத்த
எண்ணத்திற்காகப் புதிதுபோலக் காத்திருக்கிறது கண்ணாடிக் குவளை..

வே.நி.சூர்யா

வே.நி.சூர்யா நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள பறக்கையைச் சேர்ந்தவர். இயந்திரவியல் பொறியியலில் இளங்கலை பட்டம் பயின்றவர். சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், புனைகதைகள், மொழிபெயர்ப்புகள் என பங்களித்துவருகிறார்.

View Comments

  • கவிதைகள் இரண்டும் நன்றாக வந்துள்ளன.
    முதல் கவிதை மிகச்சிறப்பாக உள்ளது.

    இரண்டாவது கவிதை

    / விழுந்த சப்தம்
    உடைந்த காட்சிையைப்
    பொறுக்கிக்கொண்டு மறைகிறது/ இந்த அற்புத வரிகளைக் கொண்டிருந்தாலும் எதையோ தவற விடுவது போல் தோன்றுகிறது

Share
Published by
வே.நி.சூர்யா

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago