ஓவியம்

காலம்

< 1 நிமிட வாசிப்பு

‘காலம்’ என்ற கருப்பொருளில் ஓர் அரூப ஓவியமாகத் தீட்டலாம் என்று தோன்றினாலும் தூரிகைகளைக் கையில் எடுத்து மாதங்களாகி இருந்த நிலையில், பார்ப்போம் என்று விட்டேன். அத்தோடு, செய்துகொண்டிருக்கும் பெரிய நாவல் வேலையில் அதனை முற்றிலும் மறந்தும் போனேன். நத்தார் தினத்துக்கு ஒரு வாரம் இருக்கையில் மீண்டும் நடைப்பயிற்சியின்போது நினைவுக்கு வந்தது. காலம், நேரம் போன்றவற்றைத் தீட்டுவதென்றால், எப்படி என யோசித்தவாறே நடக்கையில், கணக்கே இல்லாத, ஒழுங்கான, ஒழுங்கே இல்லாத, சீரானது போன்ற, சீர் என்ற ஏதுமற்ற, முன்னுரைக்க முடியாத, முன்னுரைக்க முடிந்த நேர்கோட்டு, வளைந்துநெளிந்த எண்ணற்ற பாதைகளாக ‘காலம்’ என் மனத்திரையில் விரிந்ததை உணர்ந்தேன். எதுவும் தெளிவில்லாத கலவையானதோர் அரூப உணர்வுதான். என்னதான் வருகிறதென்று பார்ப்போம் என்று பென்சில் தீட்டல் போன்ற முன்னேற்பாடுகள் ஏதுமின்றி நேரடியாகத் தூரிகைகளை எடுத்தேன். மனத்தில் தோன்றியதைத் தோன்றிய விதத்தில் மூன்று தினங்களில் மூன்று கட்டங்களாக, சின்ன சின்ன உத்திகளைச் செயல்படுத்தி படிப்படியாக முன்னெடுத்தேன்.

ஜெயந்தி சங்கர்

2015 முதல் தீவிரமாக ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதத் தொடங்கியுள்ள ஜெயந்தி சங்கர் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் முக்கிய எழுத்தாளர் விழாக்களுக்கு அழைக்கப்பட்டு வருகிறார். ஆங்கிலத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் இருக்கிறார். இவரது முதல் ஆங்கில நாவல் உருவாகி வருகிறது. சங்கரி என்ற தனது இல்லப்பெயரில் தானே மொழியாக்கம் செய்துள்ளார். நல்லி திசை எட்டும் விருது, திருப்பூர் அரிமா சக்தி விருது, ஆனந்தவிகடன் விருது 2016 உள்ளிட்ட எண்ணற்ற முக்கியப் பரிசுகளும் வாங்கியுள்ளார். 1995 முதல் எழுதி வரும் இவரது ஆக்கங்கள் பிற மொழிகளில் மொழிமாற்றம் கண்டு வருகின்றன. 34க்கும் அதிகமான இவரது ஒவ்வொரு தமிழ் நூலும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. பத்திரிகைத் துறையில் மூன்றாண்டு அனுபவம் பெற்றவர். பதினாறு ஆண்டுகளாக வீட்டிலிருந்தவாறே தொடர்ந்து freelance பணிகள் செய்து வரும் இவர் கடந்த ஈராண்டுகளாக சொந்தமாக ஓவியம் பயின்று வருகிறார். இவரது முதல் முழுநாள் ஓவியக் கண்காட்சி சில நூறு ஓவியங்களுடன் 22 செப்டம்பர் 2018 அன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது.

Share
Published by
ஜெயந்தி சங்கர்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago