கவிதை

பூமி 2.0

< 1 நிமிட வாசிப்பு

கடலுக்கடியில் இருக்கும் வெப்ப நீரூற்றுக்கள்
பிறக்கப்போகும் குழந்தையின் சிரிப்பொலியோடு
களுக் களுக்கென வெந்நீரை வெளியேற்றுகின்றன.

முத்துக்கள் நிலாப்பரல்களையும்
பவளங்கள் நாளைய சூரியன்களையும்
ஏற்கனவே அடைகாக்கத் தொடங்கிவிட்டன.

கடலுக்குள் விழுந்துவிட்டகால்பந்துக்காக
காத்திருக்கும் சிறுவனைப் போல
தொலைந்த பூமி அலையில் மிதந்துவருமென
வெறிக்கிறான் மனிதன்.

எல்லா மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை
எங்கு நோக்கினும் நீரின்றி வேறில்லை.

கட்டம் 98லிருந்து
பிரபஞ்சப் பாம்பில் சரசரவென சறுக்கி
மீண்டும் முதல் கட்டத்துக்குள் விழுந்துவிட்டோம்.

இடிமுழக்கத்தில் துயிலெழும் கயா*
கூந்தலை அள்ளி முடித்து
அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகிறாள்.

பகடைக்கற்கள் உருள்கின்றன
பெருவெடிப்பின் பானைக்குள்.

வெப்ப நீரூற்றில் சின்னதாய் ஒரு சலனம்.
தாயம்.

*கயா – கிரேக்க மதத்தில் பூமியின் கடவுள் – பூமித்தாய். பூமி என்பது தன்னைத் தானே சீரமைத்துக்கொள்ளும் உயிரினம் எனவும், எத்தனை முறை வீழ்ந்தாலும் உயிர்த்தெழும் என்றும் சொல்லும் விமர்சனத்துக்குரிய கருதுகோள் ஒன்று உண்டு.


புகைப்படம்: பிரஷாந்த்

நாராயணி சுப்ரமணியன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். வனவிலங்குகளை முன்வைத்து 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே' என்ற கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார் (பாரதி புத்தகாலயம் வெளியீடு). அச்சு இதழ்கள், இணைய இதழ்கள், அறிவியல் இதழ்கள் ஆகியவற்றில் தொடர்ந்து சூழலியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Share
Published by
நாராயணி சுப்ரமணியன்

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago