பூபாலன்

தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் சித்திரங்குடி என்ற சிற்றூரைச் சேர்ந்தவரான சு.பூபாலன், ஆழ்கடல் ஒளியிழை வலைய (Submarine Optical Cable Communication) தொலைத்தொடர்பு பொறியாளராகச் சென்னையில் இருக்கிறார். நாடகக்கலைஞர் ச.முருகபூபதியின் மணல்மகுடி நாடகக் குழுவில் இணைந்து நாடக இலக்கிய செயல்பாடுகளில் தொடர்ந்து இயங்குபவர். நவீன நாடகங்கள், உலகத் திரைப்பட இலக்கியம் தொடர்பாக எழுதிவருபவர். கல்குதிரை, இந்து தமிழ்திசை, கல்கி, இதழ்களில் இவரது எழுத்துகள் வெளியாகியுள்ளன.

தேரியாள் மண்விலங்கு: நாடகக் கலைஞர் முருகபூபதியுடன் ஓர் உரையாடல்

இசை, பனுவல், நிலம், நாடக உடலிகள், பார்வையாளர்கள் என அனைத்தும் பிணையும் இழையாகையில் நாடகம் நிறைவை ஒட்டிய நிலையை அடைகிறது.

3 years ago