பிரேம பிரபா

நொடிக் கனவுகளாய்க் கடந்த காலங்களை மீண்டும் ஒழுங்குபடுத்தி, மீள்பட்டியலிட்டு, மறு வாசிப்பிற்குட்படுத்தி நம்மை நாம் தயார்ப்படுத்தும் நிலைதான் ஒரு படைப்பாளி குழந்தைத்தனத்துடன் வைக்கும் முதலடி. இப்படி நடந்துவிட்டது, இப்படி நடந்திருந்தால் இதை ஓரளவிற்குத் தவிர்த்திருக்கலாம், இப்படித்தான் நடந்திருக்க வேண்டும், என்ற தடுமாற்றத்தின் பதிவுகளாகத்தான் என் சிறுகதைகள் (1.அவன், அவள் மற்றும் நிலா 2.தொடர்ந்து தோற்கும் புலிக்கடவுள் 3.டோரியன் சீமாட்டி) என் கட்டுரைகள் (1.முகமூடிகளும் முட்கிரீடங்களும்) என் கவிதைத் தொகுப்புகள் (1.ஒரு கோடிக் கனவுகள் 2. அஞ்சறைப் பெட்டி) வெளிவந்திருக்கின்றன. முக்கியமாக ஒரு படைப்பாற்றலின் ரகசிய நீட்சி படைப்பாளியைச் சற்றே ஆசுவாசப்படுத்தும் தற்காலிகச் சலுகையே தவிர, அவன் அத்தகைய படைப்புகள் வாசகனின் மனதில் இடம் பிடிக்க அதிகம் போராட வேண்டியிருக்கிறது. தன் கதாபாத்திரங்களின் வடிவை மேம்படுத்தி வாசகனின் பொதுப்புத்தியில் சிறிது நேரம் இளைப்பாற வைப்பதற்கான யுக்தியை நோக்கித்தான் என்னைப் போன்ற பலரின் இலக்கியப் பயணங்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு பூனையின் சுயசரிதை

இருள் சில சமயம் அதன் தனிமை குறித்தோ அல்லது அவனைப் போல் இல்லாமல் மற்றவர்கள் அதை நேசக் கரம் நீட்டாமல் அலட்சியப்படுத்தும்போதோ ஒருபாடு அவனிடம் புலம்பித் தீர்த்துவிடும்.

4 years ago

கடைசி ஓவியம்

அந்த அழகியின் பின்புலத்தில் வானவில்லை வரைந்தது ஓவியருக்கு ஞாபகம் வர, உடனே தன் விரல்களைப் பார்த்தார். விரல்களில் தீற்றிக்கொண்டிருந்த நிறங்களின் ஈரம் காயாமல் பிசுபிசுப்புடன் அப்படியே இருந்தது.

5 years ago