சித்துராஜ் பொன்ராஜ்

சித்துராஜ் பொன்ராஜ் சிங்கப்பூரில் வசிக்கிறார். இதுவரை தமிழில் 'பெர்னுய்லியின் பேய்கள்' (அகநாழிகை, 2016) 'விளம்பர நீளத்தில் ஒரு மரணம்' (காலச்சுவடு, 2018) ஆகிய நாவல்களையும், 'மாறிலிகள்' (அகநாழிகை, 2015), 'ரெமோன் தேவதை ஆகிறான்' (காலச்சுவடு, 2018) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார்.

'காற்றாய்க் கடந்தாய்' (அகநாழிகை, 2015), 'சனிக்கிழமை குதிரைகள்' (பாதரசம், 2017) ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளையும், 'கதைசொல்லியின் ஆயிரம் இரவுகள்' (யாவரும், 2019) என்ற கட்டுரை நூலையும் வெளியிட்டுள்ளார்.

2019ல் இவருடைய 'இத்தாலியனாவது சுலபம்' என்ற கவிதைத் தொகுப்பும், 'மரயானை' நாவலும், 2020ம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுப் போட்டியில் தமிழ்ப் புனைவு மற்றும் கவிதைப் பிரிவுகளில் முறையே முதல் பரிசினையும் தகுதிப் பரிசினையும் வென்றன.

கயிற்றரவு

இந்தப் பலதரப்பட்ட உலகங்கள் மேலதான் நாம தினமும் சவாரி செஞ்சுகிட்டு இருக்கோம். நீங்க மட்டும் ஏன் ஒத்தை ஆளா, ஒத்தைச் சத்தியத்தோட உங்களையே முடக்கிக்கிட்டு இருக்கிங்க?

2 years ago