வைரவன் லெ ரா.

சிறிய நிலப்பரப்பில், அடர்த்தியான மனித நெருக்கமும், எந்நேரமும் மழை பொழிய தயாரான காலநிலையும், தணுத்த காற்றும், முச்சூழ் மலையும், விழி நோக்கும் எல்லை வரை பசுமையும் நிறைந்த நாஞ்சில் நாட்டுக்காரன். ஜெமோவின் 'புறப்பாடு', நாஞ்சிலாரின் 'மிதவை' இரண்டையும் எதேச்சையாக வாசிக்க, புத்தக வாசிப்பு ஆரம்பமானது. அதிபுனைவு, எதார்த்த வாதம், இருத்தலியல், இறையியல், தொன்மங்கள் நோக்கிய பயணி நான்.

காஃகாவின் 'உருமாற்றம்', ஜெமோவின் 'நூறு நாற்காலிகள்' இரண்டுமே என்னுள் பெரும் அதிர்வுகளை படரச்செய்த சிறுகதைகள். அ.முத்துலிங்கம், மண்டோ, இஸ்மத் சுக்தாய் கட்டமைக்கும் சிறுகதையின் வடிவம் கச்சிதமாகச் செதுக்கப்பட்ட சிற்பம் அல்லது அருமையாகத் தொகுக்கப்பட்ட சிம்பொனி போன்றது. ஜெமோவின் இந்தியப் படிமங்கள், தொன்மங்கள், நாஞ்சிலாரின் பகடியோடு கூடிய எதார்த்தம் எனக்கு விருப்பமானவை. மரபிலக்கிய வாசிப்பைத் தொடங்க வேண்டும். வாசிப்பைத் தவிர எழுதுவது பிடிக்கும்.

நான்காம் விதி

மனிதர்கள் ஒவ்வொரு வைரஸுக்கு மாற்று மருந்தைக் கண்டறிய அவை அதற்கு எதிராய் வேறொரு பரிணாமத்தில் தன்னை மீள்உருவாக்கம் செய்கின்றன.

4 years ago

மலரினும் மெல்லிது காமம்

காம இச்சை தோன்றும் போதெல்லாம் இக்கருவி அவர்களை மீட்டெடுக்கும்.

4 years ago