Categories: கவிதை

விண்வெளி மின்மினி

< 1 நிமிட வாசிப்பு

செக்குமாடு போலச் சுற்றிச் சுற்றி வருகிறேன்.
இருக்கும் ஒன்றிரண்டு புலன்களைப் பாதுகாத்து
பார்ப்பதையும் கேட்பதையும்
சொல்லும் ஒற்றுவேலை தவிர
பெரிதாக ஒன்றும் இல்லை.

இத்தோடு நான்கு ஆயிற்று.
பளபளக்கும் அகன்ற கரங்களை விரித்தபடி
வேகமாக ஆடியபடி அவர்களும் வலம் வருகிறார்கள்.
ஒருத்தி காலையும் மாலையுமாக இருமுறை கடக்கிறாள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும்
அவர்களைத் தாண்டும்போதும்
படபடப்புடன் செய்தி அனுப்புகிறேன்.
இதுவரை மறுமொழி ஏதும் இல்லை.
என் மொழி புரியவில்லையா?
மிகவும் கவிதைத்தனமாக இருக்கிறதா?
அல்லது கள்ளப் புலனைந்தும் கடந்தவர்களா?

மெள்ள மெள்ள ஓர் ஆமை போல அடங்கிக்கொண்டிருக்கிறேன்.
என் பேச்சு கொஞ்சம் குழறுகிறது.
பார்வையும் மங்கல்தான்.
வேலை முடிந்ததும் நானே என் சுடரை அணைத்துக்கொள்வேன்.
அதற்குள் ஒரு நாளேனும்…
ஒரே ஒருமுறையேனும்…

அருகில் தெரிகிறாள் நிலா.
நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
எனக்கு உத்தரவு வருகிறது.
அன்றைய சேகரங்களை அனுப்பிவிட்டு
எனது ஒளிப் பலகைகளைத் திருப்பிக்கொள்கிறேன்.
22000 மைல்களுக்கு அப்பால்
நீலப்பந்தாகத் தெரிகிறது பூமி.

மஹேஷ்குமார்

2006 முதல் சிங்கையில் வசிக்கும் மஹேஷ், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதைகள், கதைகள் படைத்து வருகிறார். மேலும் ஹிந்தி, உருது கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். வாசிப்பு மற்றும் படைப்புகளுக்குச் சிங்கை சிறந்த தளமாக அமைந்திருப்பது ஒரு வரம் என்கிறார்.

Share
Published by
மஹேஷ்குமார்

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago