கவிதை

இரவினைக் குளிர்ந்த நீராக்குதல்

< 1 நிமிட வாசிப்பு

கறுப்பு நிற பூனைக் குட்டியென
கொடுக்கிச் சுருண்டு துயில்கிறது இரவு
பேரமைதி நிலவும் இன்னேரம்
அதன் நிறம் உதிர்வது தெரியாமல்
நானும் தேவதையுமாக
கண்கள் கனிய விழித்திருந்து
அலாதியாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்
திட்டமிட்டு ஒதுங்கியிருக்கும்
இவ்விரவு முடிவதற்கு
இன்னும் சில துளிகளே மீதமிருக்கிறது
நீண்ட நாட்களின் பின்னர்
அபரிதமாக வாய்த்த இவ்விரவினை
விடியாதபடி வைத்திருப்பது
அத்தனை இலகுவான காரியமல்ல
துளித் துளியாகச் சிந்திக்கொண்டிருக்கும்
மூன்றாம் சாமத்தை
உடன் குளிர்ந்த நீராக மாற்றி
ஒரு குடுவையில் நிரப்பி அடைத்து வைக்கிறேன்
இனி எப்படியும் விடியச் சாத்தியமில்லை
அவசரவசரமாக பிடித்து அடைத்ததில்
தெரியாமல் சில மின்மினிப்பூச்சிகளும்
அகப்பட்டு மூச்சுத் திணறுகின்றன
அது என் மனசின் ஔியைத் தூர்வடையச் செய்தது
மனம் தாங்கொணா மட்டில்
குடுவையினை மெதுவாகத் திறந்து
மின்மினிப் பூச்சிகளை மட்டும்
வெளியில் பறக்க விடுகிறேன்
அத்தருணம் பார்த்து
ஔியோடு ஔியாகக் கலந்து
சூரியனும் வெளியேற முயற்சித்தன
அதன் தலையில் ஓங்கிக் குட்டி
குடுவையினை மூடி விடுகிறேன்
இப்போது தசாப்தகாலப் பிரிவின் துயரினை
அணுவணுவாகப் பேசித் தீர்த்தோம்

ஜமீல்

இலங்கையைச் சேர்ந்த இவர் 1990களிலிருந்து இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். இதுவரை ஏழு கவிதைப் பிரதிகளை வெளியீடு செய்திருக்கிறார். அவரது பிரதிகளுக்கு விருதுகளும் சான்றுதல்களும் கிடைத்திருக்கின்றன. 2016ஆம் ஆண்டு மதுரை நகரில் ’தாளில் பறக்கும் தும்பி’ நூலிற்காக ஒன்றரை லட்சம் ரூபாய்ப் பரிசும் கேடயமும் பெற்றுக் கொண்டதனைத் தனது எழுத்திற்குக் கிடைத்த அதியுன்னத அங்கிகாரமாகக் கருதுகிறார். ஓவியத்திலிருந்து வெளியேறும் நிறம் 2018இல் வரவிருக்கின்ற பிரதியாகும்.

Share
Published by
ஜமீல்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago