கவிதை

முத்துராசா குமார் கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

கடுக்காய் பால்
+
கரும்புச்சாறு
+
சுண்ணாம்புச்சாந்து
+
சுவர்
=
கொத்தனும் சித்தாளும்
ஊசிப்போகாமல் வாழ்கின்றனர்.
[ ]
ஆணியிறங்கிய நெற்றியில்
தொன்மப் புகைப்படங்களை
அவர்களே சுமக்கின்றனர்.
நம்மையே பார்த்தபடியிருக்கும்
உயிரற்ற சட்டக மனிதர்கள்
சுவருக்குள் வசிப்போரிடம் மட்டும்
முதுகினால் பேச்சு கொடுத்தபடியே
தொங்குகின்றனர்.


முகமலர்ச்சியோடு அலையும்
எனது தெருநாயிற்கு
மூன்று கால்கள் மட்டுமே.
அதன் தாவுதலுக்கும் ஓட்டத்திற்கும் நோவே வராது.
தராசின் எடைக்கற்களைப் போன்று ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு வாழ்க்கை எடை.
எனக்குண்டான எடையின் மீது
குமட்டலும் விரக்தியும்
பீறிடுகையில் தெருநாயினைத்
தன்னம்பிக்கைத் தத்துவமாகப் படித்துக்கொள்வேன்.
சமீபமாக
பீறிடுதலைக் கட்டுக்குள் வைக்கமுடியவில்லை.
என்னை நானே கொல்வதற்கும் பயம்.
நிலத்திலும் இருக்கக் கூடாது
வானுக்குள்ளும் போய்விடக் கூடாது.
அரூப மரமான நட்டநடு அத்துவானமே
உலகின் உயரமான உச்சிக்கிளை.
அக்கிளையிலேறிதான் மீதி வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கிறேன்.
சித்திரைத் திருவிழாவிற்கு மட்டும்
பூமிக்கு இறங்குவேன்.
பனையளவு வளர்ந்து
மூப்பேறிய தெருநாய்
என்னைப் பார்த்து தூரத்தில் போய்
உமிழ் தெறிக்கக் குரைக்கும்.
வருடத்திற்கு ஒரு முறை
வெறுமையைப் பார்த்து ஓலமிடும்
மூன்று கால் நாயினை
திருவிழா அன்றைக்கு மட்டும் கிறுக்கென அழைப்பார்கள்.

முத்துராசா குமார்

சொந்த ஊர்: மதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு அருகேயுள்ள தென்கரை கிராமம். வசிப்பிடம்: சென்னை சுயாதீனப் பத்திரிகையாளராக இயங்கி வருகிறேன். அச்சு மற்றும் இணைய இலக்கிய இதழ்களில் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறேன். 'பிடிமண்' என்ற பெயரில் எனது முதல் கவிதைத் தொகுப்பு (2019 செப்) வெளிவந்துள்ளது. வெளியீடு: சால்ட் - தன்னறம் வலைப்பூ தளம்: https://muthurasa.blogspot.com/

Share
Published by
முத்துராசா குமார்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago