எதிர்வினை

கவிதையின் மதம்: ஒரு வாசிப்பனுபவம்

< 1 நிமிட வாசிப்பு

கவிதை குறித்த பல திறப்புகளை அளிக்கும் கட்டுரை. உண்மையில் கவிதை குறித்து அறிய கட்டுரைகளை நாடாதீர்கள். உங்களுக்குள் தேடுங்கள் என்று சொல்வதற்கே ஒரு கட்டுரை தேவைப்படுகிறது என்ற நகைமுரண் புன்னகையை வரவழைக்கிறது. கவிதை அனுபவம் என்பது கிட்டத்தட்ட ஒரு சிற்பத்தை அணுஅணுவாகப் பார்த்து ரசிக்கும் அனுபவம்தான். காலத்தின் இருண்ட ஆழங்களிலிருந்து, காலாதீதம் நோக்கிய அந்த சிற்பத்தின் பயணத்தில் இடையில் வரும் சிறு புள்ளிதான் அதன் பார்வையாளன். இதே மனநிலைதான் கவிதை வாசிக்கும்போதும் தோன்றுகிறது. வாசகன் எனும் சிறு குமிழியின்முன் கவிதையெனும் பிரம்மாண்டம் தன்னை நிகழ்த்திவிட்டுச் சென்று விடுகிறது. நல்லகவிதை என்பது மூளையை எட்டும்முன் இதயத்தை எட்டிவிடும் என்று தேவதேவன் சொல்வது, ஒருவகையில் கவிதையைப் புரிந்து கொள்ள முயற்சிக்காதீர்கள், உணரத் துவங்குங்கள் என்பதைத்தான். கவிதை வாசகர்கள் செய்யும் பிழை என்பது, பெரும்பாலான சமயங்களில் ஒரு கவிதையை மூளையின் துணைகொண்டு வாசித்து அலசிப்பார்த்து அதைப் புரிந்து கொள்ள முயல்வதுதான். இப்படிச் செய்வது அந்தக் கவிதையின் நேரெதிர் திசைக்கு பயணிப்பது போன்றதுதான். “கவிதை என்பது ஆன்மிகமான கண்டதைதல்” என்ற வரி மிக முக்கியமானது.

“ஒரே வழிமுறைதான் உள்ளது. கவிதை என நம்மைத் தீண்டிவிட்ட ஒவ்வொரு கவிதை கொண்டும் கவிதையை நாம் வரையறுத்துக்கொண்டே செல்வதுதான் அது.” கவிதையை அணுகுவதற்கான முக்கியமான வழிமுறையை இவ்வரி நினைவுறுத்துகிறது. ஒரு கவிதையை அறிந்துகொள்வதற்கு ஒரே வழி அதே தீண்டலை நமக்கு அளித்த இன்னொரு கவிதைதான். சாணைப் பிடிப்பதும் கவிதை, சாணை பிடிக்கப்படுவதும் கவிதை.

“கவிதையில் வளர்ச்சி என்றும் முன்னேற்றம் என்றும் கிடையாது. குறிப்பாக எனது கவிதையில். அதன் புறத்தோற்ற மாறுபாடுகளை வேண்டுமானால் ஏதாவது சொல்லலாம். கவிதையின் அகம் மாறாததும் மாற்ற முடியாததுமான ஓர் இயக்கம். வாழ்வின்பாற்பட்டது. அதைத்தான் நாம் கண்டடைய வேண்டும்.” இந்த வரி கலைக்கும் பொருந்தும். டி.எஸ்.எலியட்டின் இவ்வரிகளை நினைவுபடுத்தியது கட்டுரையின் இந்தப் பகுதி: “கலை மாறுவதில்லை. அதற்கான பேசுபொருட்கள்தான் மாறிக்கொண்டேயிருக்கின்றன.”

மிக முக்கியமான கட்டுரை.

கணேஷ் பாபு

2008-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் வசித்து வரும் கணேஷ் பாபு, தனக்கே உரிய பாணியில், மொழியின் பல்வேறு அடுக்குகளுக்குள் புகுந்து பார்க்க எத்தனிக்கும் புதுப் படைப்பாளி. பின்மதியங்களில் தூங்கி வழியும் தெருவினில் விளையாடும் சிறுவர்கள், உடைந்த கண்ணாடித் துண்டுகளின் வழியே இளவெயிலை வீட்டுக்குள் பாய்ச்சுவது போல, மொழியின் வெளிச்சத்தால் வாழ்வை ஆராய்வதே தன்னுடைய கதைகளின் நோக்கம் என்று நம்புகிறார். வாழ்வின் பல்வேறு சாத்தியங்களை மொழியின் பல்வேறு சாத்தியங்களால் அள்ளி எடுப்பதே எழுதுபவனின் சவால் என்று சொல்லும் இவர், தன்னுடைய எழுத்து வழிகாட்டிகளாக எஸ்.ராமகிருஷ்ணனையும், ஜெயமோகனையும் சுட்டிக் காட்டுகிறார். சிறுகதைகளையும், நவீன இலக்கியம் மற்றும் நவீன கவிதை வாசிப்பு சார்ந்த கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடனால் சிறந்த சிறுகதைகளாக சிங்கப்பூர் சிறுகதை பயிலரங்குகளில் தேர்ந்தெடுக்கப் பெற்றிருக்கின்றன. இவரது கதைகள் சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ், தமிழ்முரசு போன்ற இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன.

Share
Published by
கணேஷ் பாபு

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago