Uncategorized

ஹோட்டல் சுதந்திரம்

< 1 நிமிட வாசிப்பு

ஒளிரும் உணவு விடுதி. சுற்றிலும் கோடை மழையின் விளம்பர அறிவிப்பு.
கையில் ஒரு புத்தகம்.
தலைப்பு: காற்று, மணல், நட்சத்திரங்கள்.
அங்கே நெடுநேரமாகப் பாலைவனத்தில் நிற்கிறார் ஒரு விமானி.
இங்கேயும் ஒருவர் உண்டு.
இருக்கையிலமர்ந்து, அதுவும் எந்த வானிலை அறிக்கைகளிலும்
வராத ஒரு ரகசியப் புயலினூடே,
தன்னை ஓட்டிச்செல்ல முயன்றபடி.
சிலர் கைகோர்த்தவாறு உள்நுழைகிறார்கள், சிலர் அத்துணை
இடைவெளிவிட்டு வெளிநடக்கிறார்கள்.
அதாவது தலைவிதியின் சுமாரான நாடகம்.
அவரா? அவர்தான் பிறப்பதற்கு முன்பிருந்து தன்னந்தனியே சாப்பிடுபவர்.
இவளைத் தெரியாதா உனக்கு?
இவள்தான் தனக்குத்தானே ஊட்டிவிட்டுக்கொள்பவள்.
ஒருவரும் கேட்கவில்லை “சரி. நீ யார்?” என்று.
நாடகத்தை விட்டு வெளியேறி நடக்க ஆரம்பிக்கிறேன்.
மழைக்குப் பிறகான கந்தல் அமைதியில்
தவம்புரியும் தெருவிளக்குகள். அவற்றின் முன்பு
அரங்கேறும் மழைப்பூச்சிகளின் நடனம். தூரத்திலே
கைவிரித்துவிட்ட தென்னைமரங்கள்.
புகைப்படத்திற்குக் குடும்பத்துடன் நிற்கும் இருள் மலைகள்.
ஒரு நட்சத்திரம் கூட மினுங்கவில்லை எனக்காக.
ஆயினும் நான் உணர்ந்தேன்:
உனது அருகாமையை
காற்றில் பறந்துவிடாதிருக்க உடைகளின் மேல் மாட்டப்பட்ட கொக்கிகள் போலே
என் மீதிருக்கும் ராத்திரி வானத்தை.


புகைப்படம்: பானு

இதழ் 14 பிற படைப்புகள்

வே.நி.சூர்யா

வே.நி.சூர்யா நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள பறக்கையைச் சேர்ந்தவர். இயந்திரவியல் பொறியியலில் இளங்கலை பட்டம் பயின்றவர். சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், புனைகதைகள், மொழிபெயர்ப்புகள் என பங்களித்துவருகிறார்.

Share
Published by
வே.நி.சூர்யா

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago