ஜெயந்தி சங்கர்

2015 முதல் தீவிரமாக ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதத் தொடங்கியுள்ள ஜெயந்தி சங்கர் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் முக்கிய எழுத்தாளர் விழாக்களுக்கு அழைக்கப்பட்டு வருகிறார். ஆங்கிலத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் இருக்கிறார். இவரது முதல் ஆங்கில நாவல் உருவாகி வருகிறது. சங்கரி என்ற தனது இல்லப்பெயரில் தானே மொழியாக்கம் செய்துள்ளார். நல்லி திசை எட்டும் விருது, திருப்பூர் அரிமா சக்தி விருது, ஆனந்தவிகடன் விருது 2016 உள்ளிட்ட எண்ணற்ற முக்கியப் பரிசுகளும் வாங்கியுள்ளார். 1995 முதல் எழுதி வரும் இவரது ஆக்கங்கள் பிற மொழிகளில் மொழிமாற்றம் கண்டு வருகின்றன. 34க்கும் அதிகமான இவரது ஒவ்வொரு தமிழ் நூலும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. பத்திரிகைத் துறையில் மூன்றாண்டு அனுபவம் பெற்றவர். பதினாறு ஆண்டுகளாக வீட்டிலிருந்தவாறே தொடர்ந்து freelance பணிகள் செய்து வரும் இவர் கடந்த ஈராண்டுகளாக சொந்தமாக ஓவியம் பயின்று வருகிறார். இவரது முதல் முழுநாள் ஓவியக் கண்காட்சி சில நூறு ஓவியங்களுடன் 22 செப்டம்பர் 2018 அன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது.

காலம்

'காலம்' என்ற கருப்பொருளுக்கு ஜெயந்தி சங்கர் தீட்டிய ஓவியம்

3 years ago

ஒரு பறக்கும் நாளில்

நீங்கள் சாவகாசமாய் நடந்து வந்துகொண்டிருக்கிறீர்கள். திடுமென நிற்க முடியாமல் ஓடும் நோய் தாக்கிய ஒருவன் உங்களை இடித்துத் தள்ளிவிட்டு ஓடுகிறான். நீங்கள் ஓடத்துவங்குகிறீர்கள்.

5 years ago

கனவு: ஜெயந்தி சங்கர் ஓவியங்கள்

எழுத்தாளர் ஓவியர் ஜெயந்தி சங்கரிடம் "கனவு" என்ற தலைப்பு கொடுத்து ஓவியங்கள் வரைய சொன்னோம்.

5 years ago

உவன்

புல் வாடை படர்ந்த குளிர்ந்த பனிக்கூழாய்க் கரைந்து அரைநொடியில் காணாமல் போகும் அந்தத் துளியை, என்றேனும் ஒருநாள் தன் தொண்டை நனையும் வரை உள்ளிழுத்துச் சுவைக்க வேண்டும்…

5 years ago