எம்.கே.குமார்

'மருதம்' (2006), 5.12pm (2017) என்ற சிறுகதைத்தொகுப்புகளும் 'சூரியன் ஒளிந்தணையும் பெண்' (2013) என்ற கவிதைத்தொகுப்பும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூர் பெண் கவிஞர்களின் 'நதிமிசை நகரும் கூழாங்கற்கள்' (2014) நூலின் தொகுப்பாசிரியர். “பசுமரத்தாணி” என்னும் குறும்படத்தின் இயக்குநர். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 'கண்ணதாசன் விருது' (2017), தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத்தமிழ் இலக்கிய விருது (2017), காலச்சுவடு சுந்தர ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு, சிங்கப்பூர்ப் பாதுகாப்பு மன்றம் (Workpalce Safety & Health Council) நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசும் பெற்றவர். இவருடைய சிறுகதைத்தொகுப்பு 5.12pmக்கு சிங்கப்பூர் இலக்கியப் பரிசு (மெரிட்) 2018இல் வழங்கப்பட்டது.

எம்.கே.குமார் கவிதைகள்

நகரும் காற்றைத் துழாவுகிறேன் எந்தச் சொல் என் சொல்?

5 years ago