ஷண்முகராஜா

ஷண்முகராஜா இலங்கை, மஸ்லியாவில் பிறந்து, 1984ல் இந்தியாவில் மண்டபம் முகாமுக்கு வந்து சேர்ந்தார். மதுரையில் தனது பள்ளி மேற்படிப்பை முடித்து, பற்பல வேலைகளுக்குப் பின் ஓவியக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். சுயமாகக் கற்றுத் தேர்ந்தவர். ஓவியர் மருதுவின் அறிமுகத்தால் நவீன ஓவியப் பரிச்சயம் கொண்டார். நேட்டிவ்க்ரியா எனும் நிறுவனம் வழியாக ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவற்றை உருவாக்கி ஆர்வலர்களுக்கு விநியோகிக்கிறார்.

மண்டபம்

’மண்டபம்’ என்ற இந்தச் சித்திரம் ஓவியர் ஷண்முகராஜா தனது முகாம் வாழ்வில் எதிர்கொண்ட ஒரு தற்கொலைச்சம்பவத்தின் பாதிப்பில் உருவானது.

4 years ago