Categories: கவிதை

யுவராட்சஷன்

< 1 நிமிட வாசிப்பு

பேரண்டத்தின் எல்லைப்பகுதியில்
இருக்கும் ஒளியறாக்காட்டிலிருந்து
ராட்சஷமனிதர்கள்
பூமிக்கு அருகில் வந்தார்கள்.
பிரம்மாண்டமான அவர்களுக்கு
கிரகங்கள் எல்லாம் கனிகள்தான்.
ராட்சஷனின் பிள்ளை யுவராட்சஷன்
கேட்டான்:
அப்பா..அப்பா..
எனக்கந்த நீலக்கனி வேண்டும்
என்று,
படக்கென்று பூமியைப் பறித்து
அவன் கையில் கொடுத்துவிட்டான்
ராட்சஷன்.
கையிலிருந்த பூமிக்கனியைப் பார்த்து
உள்நாக்குகூட உணர்ச்சியில் துடித்தது
யுவனுக்கு.
ஆசையில் ஒருவாய் கடித்துவிட்டு
தூ… உப்புக்கரிக்கிறது
என்று துப்பிவிட்டான்.
நல்லவேளை நம்மைக்
கடல்கள் காப்பாற்றின.

கார்த்திக் திலகன்

முகவரி: கூத்தப்பாக்கம் கடலூர் பணி: துணை வட்டாட்சியர், விழுப்புரம் மாவட்டம் படைப்பு: புலனுதிர் காலம், கவிதை தொகுப்பு (2013)

Share
Published by
கார்த்திக் திலகன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago