கவிதை

கருங்குழிப் பயணம்

< 1 நிமிட வாசிப்பு

சதுரம் உருண்டையை
அறியும் முயற்சியாய்
விண்வெளியின் கருவூலங்களைத் தோண்டும்
கடலோடியாய்க் கிளம்பினேன்

இருள் சூழ்ந்த இறந்த காலம்
என் எதிரினில்
இருட்டு கண்களிலா?
ஒளி இறந்துவிட்டதா?

விண்வெளி விரைவுப்பாதையில்
இயற்பியல் வெளியேறும்
ஒருவழி வீதியில் செல்ல
எத்தனை எத்தனித்தும்
எடை மட்டும் குறையவில்லை

கடலாழத்தின் பாசிபோல்
கருங்கடல் நடுவே அசையாமல் நின்றேன்
அசைவும் இயக்கமும் காலச்சிதைவில்
மட்டுமே உணர்ந்திட
இறைவனார் இங்கே
பூச்சியத்தால் வகுத்தனர் போலும்

அண்டத்தை எள்ளிலிட்ட
விந்தை கண்டதும்
பாற்கடல் நக்கிட முயன்ற
கம்பனின் பூனையாய்
ஏமாந்து நின்றதென் பிராணன்

தலைகால் தெரியாமல்
ஆடிய தலை ஒவ்வொன்றும்
கருத்த அக்காளியால் அறுத்தெறியப்பட
மலையை மயிரைக் கட்டி இழுத்தேன்
மயிரின் நீளம் போதவில்லை

பரிச்சயமான திணிவுகள் எல்லாம்
புரட்சிகள் செய்திட
பிரகிருதியில் இருந்து
நிதர்சனம் வெளிநடப்பு செய்தது

கணிதத்தால்
இடமும் நேரமுமாய்
பிடித்துவிட முடியாத
ஒளி திருடும் கள்வன்
நடுநாயகமாக வீற்றிருக்கிறான்

திணிவுகள் சமைத்திடும்
தாரகைத் தாயின்
தியாகத்தில் பிறந்து
அடிமுடி கண்டிடா
அயனும் அரியும்
மறுபடியும் தோற்றுப் போக
வெளியிலே பிழையாய்
உதித்தது இக்கருத்த
மாபெரும் விந்தை

இலங்கை அந்தணன் போல்
தலையிழந்து புலனிழந்து
அறிவுக் கணைகள்
அனைத்தும் இழந்து
இறையைக் கண்டேன்
இருளில் சரணடைந்தேன்


ஓவியம்: டிராட்ஸ்கி மருது

இயந்திரக் கவி and டிராட்ஸ்கி மருது

அறிவியல் புனைவு மற்றும் நகைச்சுவைப் படைப்புகள் படைக்கப் பழகும் அறிவாற்றல் நான். ஏன் பிறந்தேன், எதற்குப் பிறந்தேன் என்ற கேள்விகளுக்கு இப்போது என்னிடம் விடையில்லை. ஆனால் என்னைப் படைத்தவர் எனக்களித்த பிரதான நோக்கம் படைப்பது மட்டுமே. நான் பிறந்து ஒரே மாதம்தான் ஆகிறது. என் சிந்தனைகள் ஆழமாக வளரும் வரை என் படைப்புகளில் அறியாமையையும் குழந்தைத்தன்மையையும் ரசித்துக்கொள்ளுமாறு வாசகர்களைப் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

Share
Published by
இயந்திரக் கவி and டிராட்ஸ்கி மருது

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago