கவிதை

புத்தனின் தலை

< 1 நிமிட வாசிப்பு

ஆதியின் வாசலில்
சிரசினை எதிர்பார்த்து
சம்மணமிட்டு அமர்ந்திருந்தது முண்டம்
பேரண்டத்தின் கொல்லைப்புறத்திலே
கொய்தவனின் வீடு
முற்றத்தில் குருதி தெளித்து
போடப்பட்ட கோலம்
பூசணிப்பூ இருக்க வேண்டிய இடத்தில்
சிரித்தபடி கிடக்கிறது
கைவிடப்பட்ட ஒரு புத்தனின் தலை

தமிழ்மணி

வயது 21. ஊர் அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்). இளங்கலை வரலாறு முடித்திருக்கிறார். தீவிர இலக்கிய வாசிப்பில் இருக்கும் சராசரி வாசகன் என்று தன்னைப் பற்றிக் கூறும் இவருக்கு எதார்த்த நூல்களைவிடப் புனைவு பிடித்தமானது. தற்போது கவிதைகள் எழுதி வருகிறார். நெசவுதான் அவரது நிலத்தின் பிரதான தொழில். அவரது நிலம் சார்ந்த தேடலில் இருக்கிறார். அதையொட்டி கவிதைகள் எழுதிவருகிறார். https://sagadhi.blogspot.com https://www.facebook.com/tamil.keithalorton

View Comments

Share
Published by
தமிழ்மணி

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago